வியாழன், 20 ஜூன், 2019

பொன்னியின் செல்வன்

தமிழில் வெளி வந்த புகழ் பெற்ற புதினங்களை திரை படங்களாய் எடுக்க, மேற்கொள்ளப் பட்ட முயற்சிகள் ஒரு சில மட்டுமே வெற்றி பெற்றுள்ளன.



கொத்தமங்கலம் சுப்பு அவர்கள் எழுதிய தில்லானா மோகனாம்பாள் , சுஜாதா அவர்களின் பிரியா ஆகியவை இதில் அடக்கம் என்பது நம்மில் பலருக்கு நிச்சயம் தெரிந்திருக்கும்.
தில்லானா மோகனாம்பாள் தொடர் நிறைவு பெற்ற போது ,
நாயகன் ,நாயகியின் திருமணத்தை வாழ்த்தி வாசகர்கள் ஏராளமானோர் ஆனந்த விகடனுக்கு தந்தி அனுப்பினார்கள் என ,
அக்கதையின் தாக்கத்தை இன்றும் சிலாகித்து சொல்லிக் கொண்டிருப்பார் என் தந்தை.

இருப்பினும், அதற்கும் மேலான தாக்கத்தை பொன்னியின் செல்வன் புதினம் நம்மிடையே இன்றும் ஏற்படுத்துகிறது என்பதில் மாற்று கருத்து இருக்க முடியாது.
மோக முள் கதையில் தி.ஜானகிராமன் அவர்கள் நம்மை 1940களின் குடந்தைக்கே நம்மை இட்டு செல்வதை போலவே ,
ஆடி திருநாளில் துவங்கி வீராணம் ஏரிக்கே இட்டு செல்வதிலும் சரி , குந்தவையுடனும் வந்தியத்தேவனுடனும் ஓடத்தில் நம்மை பயணம் செய்ய வைப்பதிலும் கல்கி அவர்கள் வெற்றி பெறுகிறார்.
மிக அதிக கதா பாத்திரங்களும் , அளவுக்கு அதிகமாக புகுத்தப்பட்ட 
பா மாலைகளும் கதையின் ஓட்டத்தினை சற்றே மட்டுப் படுத்துவதாக நான் கருதுகிறேன்.
இந்த புதினத்தை திரைப்படமாக எடுக்க மேற்கொள்ள பட்ட முயற்சிகள் யாவும் ,
இன்று வரை வெறும் ஏட்டளவில் மட்டுமே உள்ளன என்பதே
கல்கி அவர்களின் பெருமையை இன்றும் பறை சாற்றிக் கொண்டிருக்கிறது.

திரையிலும்,அரசியலிலும் வெற்றியை மட்டுமே சுவைத்து வந்த MGR அவர்கள் கூட முயற்சித்து பின்னர் கைவிட்டதாகவும் கேள்வி.

ஆயினும் ஒரு வேளை அனைத்தும் கைகூடி வந்து இத்திரைப்படம் தயாரிக்கப்பட்டால், 
யார் யார் எந்த பாத்திரத்திற்கு அழகாக பொருந்துவார் என்று யோசித்தேன்.
இந்த நடிகர் வயது என்ன, இவருக்கு அவர் பொருத்தமா, இப்போது உயிரோடு இருக்கிறாரா போன்ற வினாக்களுக்கு என்னிடம் விடை இல்லை.

பாத்திர தேர்வு என்பது , கல்கி அவர்கள் விவரித்த படியும் , மணியம் அவர்கள் வரைந்த ஓவியத்திற்கு கிட்ட தட்ட பொருந்தும்படியும் அமைவதும்,
யார் இதனை திரையில் அழகாக செய்ய கூடும் என்பதே.

இயக்குனராக இமயங்களும் , சிகரங்களும் மேலும் பிரும்மாண்டமானவர்களும் எண்ணத்தில் வந்து மோதினாலும் ,
இதற்கு பொருத்தமானவர் திரு. A. P நாகராஜன் அவர்களே என்பதில் ஐயமில்லை.
K.பாக்கியராஜ் அவர்களின் திரைகதைக்கு  பொருத்தமான இசை அமைப்பாளர் K.V மஹாதேவன் அவர்கள் தான்.


ரவி தாசனாக - இணையற்ற நடிகர் பாலையா
   


தேவராளனாக – நடிகவேள் M.R. ராதா
                       
இடும்பன்காரியாக  – அசோகன்
   

நந்தினியாக   - அலட்சிய நடிகை பானுமதி
 
நாகை புத்த பிக்குவாக  -  சத்தியராஜ்



குடந்தை ஜோதிடராக -  தேங்காய் ஸ்ரீனிவாசன்
பினாகபாணியாக –  டணால் தங்கவேலு         
   
தியாக விடங்கராக – VK ராமசாமி


ஈசான சிவபட்டராக  – சுப்பையா
                               
படகோட்டி முருகையானாக - வடிவேலு
        
                    



பார்த்திபேந்திர பல்லவனாக - பார்த்திபன்   
 

அன்பில் அநிருத்த பிரம்மராயராக – T.R மகாலிங்கம்


கந்தமாரனாக - நகைச்சுவை சக்ரவர்த்தி நாகேஷ்


மணிமேகலையாக -  நடிகையர் திலகம் சாவித்ரி


சாந்தமான சேந்தன் அமுதனாக

 


அழகிய மதுராந்தகராக - அரவிந்தசாமி



செம்பியன் மாதேவியாக -கண்ணாம்பாள்
 

சுந்தர சோழனாக - நடிகர் திலகம் சிவாஜி


வானவன் மாதேவியாக  - நாட்டிய பேரொளி பத்மினி
 
ஆதித்த கரிகாலனாக - இளைய திலகம் பிரபு
     

ஊமை பெண்ணாக - ஆச்சி மனோரமா
   

புத்திசாலித்தனம் நிறைந்த குந்தவையாக - ரேவதி

                                      
அப்பாவி பெண் வானதியாக - மீனா
  
பித்துக்குளித்தனம் நிரம்பிய பூங்குழலி கதா பாத்திரத்திற்கு - ஊர்வசி   
பெரிய பழுவேட்டரையராக - நம்பியார்


சிறிய பழுவேட்டரையராக  - நாசர்  




ஆழ்வார்கடியானாக - நகைச்சுவை மன்னன் விவேக்


அருள்மொழிவர்மனாக - நவரச நாயகன் கார்த்திக்


வந்தியத்தேவனாக கமல் ஹாசன்



மருதநாயகத்தை கைவிடும் முன்னரே ,
கமல் 80களின் இறுதியில் கல்கிக்கு அளித்த பேட்டியுடன் இந்த திட்டத்தையும் ஏட்டளவில் நிறுத்திக்கொண்டார் போலும்.



ஒரு வேளை இத்திட்டத்தை இவர் நிறைவேற்றி இருந்தால் , 
பொன்னியின் செல்வன் இந்திய திரைப்பட வரலாற்றில் ஒரு மைல் கல்லாக அமைந்திருக்கும் என்பதில் ஐயமில்லை.