மே மாதம் 7ம் தேதி காலை தோழர் சுந்தர் செய்தியை பகிர்ந்த போது என்னால் நம்பத்தான் முடியவில்லை. அதிர்ச்சியில் உறைந்தேன்.
2001ம் ஆண்டு இறுதியில் நான்
அமெரிக்காவிலிருந்து நம் தேசம் திரும்பி வந்து வேலை தேடிக்கொண்டிருந்த போது எனது சித்தப்பா
அவர்களால் அறிமுகம் செய்து வைக்கப் பட்டவர் மகாலிங்கம்.
அப்போது அவர் HP நிறுவனத்தின் மனித வள
மேம்பாட்டுத்துறை தலைவராக இருந்தார்.
மனிதர்களை எடை போடாமல் , அவர்கள் மீது நம்பிக்கை வைப்பதில் விருப்பம் உள்ளவர்.
தகவல் தொழில் துறை நலிவடைந்திருந்த அந்த
நேரத்தில் , மிக
மிக குறைந்த ஊதியத்திற்கே ஆட்களை பணியமர்த்தும் வாய்ப்பு இருந்தும்,
அதை செய்யாமல் தகுதிக்கேற்ப ஊழியம் வழங்க
வேண்டுமென்பதில் கொள்கை மாறாதிருந்தார்.
இக்கொள்கை இவரை மட்டுமல்ல, நிறுவனத்தின் நேர்பெயரையும் உயர்த்திக் காட்டியது.
தொழிலில் சிகரம் தொட்ட போதும், வாழ்க்கையில் சிரம் தாழ்ந்தே இருந்தார்.
https://www.youtube.com/watch?v=OfLyil_K89g
நண்பர் சுந்தர் (எங்களுக்கு முன்னாள் மேலாளர்) HP பெங்களுருவில் புதிதாய் விநியோக மையம் (Delivery Center இன் மொழி பெயர்ப்பு J ) அமைக்க மிகப் பெரிய அளவில் உறுதுணையாய் இருந்தார்,
மேலாளராக அல்லாது அப்துல் கலாம் அவர்களை போல் வழி நடத்தும் ஒரு தலைவனாக.
திரு. சுந்தர்
HP மற்றும் IBM நிறுவனங்களில் நான் சேர்வதற்கு
இவரும் ஒரு முக்கிய காரணமென்றால் அது மிகையில்லை.
தனது மேலாளர் திரு. அருண் தியாகராஜன் அவர்கள் மீது இவர்
கொண்டிருந்த குரு பக்தி (தூய தமிழிலில் “ஆசான் வழிபாடு” என்று நினைக்கிறேன்) அளவிட
முடியாதது என்பது,
பொது இடங்களில் கூட சற்றும் யோசிக்காமல் பாதம்
தொட்டு ஆசி பெறுமளவிற்கு செல்லும்.
Times
of India நாளிதழில் அவர் அளித்த பேட்டியே அதற்கு
சாட்சி.
IIM போன்ற கல்வி நிறுவனங்களுக்கு பகுதி நேர பேராசிரியராகவும் பணி புரிந்தாலும், கற்றது கையளவே என்ற எண்ணம் கொண்டவர்.
அன்றாடம் புதிதாய் என்ன பயின்றோம் / பயிற்றுவித்தோம் என்பது,
இளைய தலைமுறை இவரது தலைமைப் பண்புகளிலிருந்து பாடம் கற்றுக் கொள்ளவேண்டிய ஒன்று.
சுமார் 9 வருடங்களுக்கு முன் விருப்ப ஓய்வு
பெற்று, நிறுவனங்களுக்கு ஆலோசகராக பணியாற்ற துவங்கினார்.
இத்தனை பெருமைகள் இருந்தும், என் மீது நட்பு
மட்டுமல்ல, தனிப்பட்ட முறையில் பாசமும் கொண்டவர்.
நான் 5 வருடங்கள் முன்பு அமெரிக்கா சென்ற போது,
மின்னஞ்சலிலேயே அவரது நண்பர்களை எனக்கு அறிமுகம் செய்து வைத்தது மட்டுமல்லாது,
எனக்கு வேண்டிய அனைத்தும் செய்து தருமாறு
அவர்களுக்கு அன்பு கட்டளையும் இட்டார்.
சென்னைக்கு விஜயம் செய்யும் பெரும்பான்மையான
நேரங்களில் தன்னை சந்திக்க அழைப்பு விடுப்பார்.
ஒரு சில நட்சத்திர விடுதிகளில் எனக்கு கிட்டிய
உணவு நண்பரின் உபயமே.
தர்மபுரியை சேர்ந்த மனிதருக்கு ,
தர்மம் புரிவது பகுதி நேர பணியாகவே இருந்து வந்தது என்பது நாங்கள் அறிந்த உண்மை.
“ நிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரைப்
போற்றாது புத்தே ளுலகு “
என்ற குறளுக்கு பொருத்தமான மனிதர் மாலி அவர்கள் என்பது எனது தாழ்மையான கருத்து.
அன்பை மட்டுமே பிறருக்கு பரிசாக அளித்து வந்த திரு.மாலி,
60 வயதில் முதன் முறையாக ஏமாற்றத்தை அளித்திருக்கிறார்
கரோனாவிற்கு மற்றொரு பலி என்ற பெயரில்.
கரோனாவிற்கு தான் கருணை இல்லை , இறைவனுக்குமா இரக்கம் இல்லை.