செவ்வாய், 20 மார்ச், 2018

ஓலையும் அதன் சுவடுகளும்

பொதுவாகவே எனக்கு வரலாற்றின் மீது மாபெரும் ஈர்ப்பு உண்டு.

வரலாற்றில் முதுகலைப் பட்டம் பெற வேண்டும் என்று எண்ணியுள்ளேன்.
(எப்போது நடக்குமோ தெரியவில்லை)

வரலாறு (வரலாறுகள் எனும் பன்மை சொல் உண்டா ?) இன்றி நாம் இல்லை.

நம் முன்னோர்களின் அருஞ் செயல்களைஇலக்கியங்களை என எத்தனையோ விஷயங்களை வெளி கொணர்வதில் கல் வெட்டுக்கள் மட்டும் அல்ல,ஓலை சுவடிகளும் பெரும் பங்கு வகிக்கின்றன.

அச்சுவடிகளை பாதுகாக்கும் முறைகளையும் அவற்றை பற்றிய சிறு தகவல்களையும் உங்களுடன் பகிர்ந்து கொள்ள விழைகிறேன்.

இம்மாத துவக்கத்தில் ஒரு திருமண விழாவில் எனது  தந்தையின் நண்பர் முனைவர்  பெருமாள் அவர்களை  சந்திக்க  நேர்ந்தது.

அப்போது  தட்டிய  பொறி  நான் ஏன் ஓலை  சுவடிகளைப்  பற்றி  வலை  பூவில்  
எழுத  கூடாது  என்பது.

மண்டபத்திலேயே அவருடன் பேசி  சில விவரங்களை சேகரித்தேன்.

சற்றும்  தயங்காமல்  விவரங்களை  வாரி  வழங்கினார் .

துவங்கும்  முன்  இவரை  பற்றி ஒரு  சிறு  குறிப்பு.




பௌதீகம் இளங்கலையும் பின்னர் நூலகவியலில் முதுகலை பட்டமும் பெற்று கல்வி மீதான வேட்கை தீராமல் முனைவர் பட்டமும் பெற்ற 
திரு. பெருமாள் அவர்கள் திண்டுக்கல் அருகே உள்ள ஒட்டன் சத்திரம் பகுதியை பூர்வீகமாக கொண்டவர்.

தஞ்சை  சரஸ்வதி மஹால் நூலகத்தில் 1980 ல் பணியில் சேர்ந்து,  2012  ஜூன் மாதம் பணி ஓய்வு பெற்றார்.

தேசிய கலை பொருட்கள் பாதுகாப்பு ஆய்வகம்லக்னோபாண்டிச்சேரி ஆவண காப்பகம். ஜப்பான் தேசிய நூல்கள் காப்பகம்,லண்டனில் உள்ள  விக்டோரியா அருங்காட்சியகம் ஆகிய இடங்களில் சுவடி பாதுகாப்பிற்கான பயிற்சி பெற்றவர்.

“நூலக பயன்பாடும் பாதுகாப்பும்” “சுவடி பாதுகாப்பு வரலாறு” மற்றும்  “வாருங்கள் நம் நூலகத்தை பாதுகாப்போம்” ஆகிய நூல்களை எழுதியுள்ள இவர்நெதர்லாந்து லெய்டன் பல்கலைகழகத்தாலும்மலேசிய தமிழ் சங்கத்தாலும் பேச்சாளராய் அழைக்கப் பட்ட பெருமை கொண்டவர்.

தஞ்சையில் நூலக தகவல் அமைப்பின் செயலாளராய் பணியாற்றி போது தான்இவரது தலைமையில் முதன் முதலில் தலைமையின் கீழ்
“தஞ்சையின் சுற்றுலா வரை படம்” உருவாக்கப் பட்டது.

பழங்கால ஓலை சுவடிகளை காப்பதும்  இவரது முக்கிய பணி .
இவற்றில் சுவடி சேகரிப்பும் அடங்கும்.


சுவடி ஆராய்ச்சியில் திரு. பெருமாள் அவர்கள் மாணவர்களுடன் 

சுவடிகள் பற்றி இவர் கூறிய தகவல்கள் மிகவும் ஆர்வத்தை தூண்டுபவையாக இருந்தன.

வாருங்களேன் பாப்போம்.

ஓர் ஓலை சுவடி என்பது அதிக பட்சம் 500 ஆண்டுகள் வரையே  அழியாமல் இருக்கும்.



பழங்கால ஓலை சுவடியின் புகை படம் ஒன்று திரு பெருமாள் அவர்கள் என் வேண்டுகோளின்படி அனுப்பியது 

ஆகவே இப்போது ஒரு சுவடி 600 அல்லது 1000  ஆண்டுகள் பழமையானது
என்று இருக்குமானால் அது அச்சே அன்றி அசல் அல்ல.

தமிழில் நமக்கு கிடைத்த பழமையான சுவடிகள் என்றால் அது
     தொல்காப்பியம்  தான்.

தற்போது இருப்பவை அதன் பிரதிகளே.

நம் நாட்டில் இருக்கும் மிகப் பழமையான சுவடி எது என்றால் அவை 1428  ஆம் மற்றும் 1430  ஆம் ஆண்டுகளில்  நமக்கு கிடைத்த 
வேதங்கள்பற்றிய வட மொழி சுவடிகள்  தான்.

1428 ம் ஆண்டை சேர்ந்த அச்சுவடி சம்ஸ்கிருத மொழியில் எழுதப்பட்ட அர்த்த சாஸ்திரம் ஆகும்.

1430 ம் ஆண்டை சேர்ந்த சுவடி தஞ்சை சரஸ்வதி மகாலில் உள்ளதுதெலுகு மொழியில் உள்ளது.

ஆனால் உலகின் பழமையான சுவடி எங்கு உள்ளது என்று ஆராய்ந்தால் 
நமக்கு கிடைக்கும் விடை ஜெர்மனி நாடு.

ஆம் நண்பர்களே அச்சுவடிகள் இங்கிருந்து யுவான் சுவானங்கினால் எடுத்து செல்லப் பட்டிருக்கிறது சீனாவிற்கு.

சென்ற நூற்றாண்டில் ஆராய்ச்சிமேற்கொண்ட ஒரு ஜெர்மானியர் ஒரு குகையில் இந்த ஓலை சுவடியை கண்டெடுத்து ஜெர்மனி நாட்டிற்கு எடுத்து சென்று விட்டார்.

கிபி 2ம் நூற்றாண்டை சேர்ந்த இது சமசுகிருத மொழியில் உள்ளது.

இதற்கு அடுத்தபடியாக 4ம் நூற்றாண்டை சேர்ந்த சுவடி தற்போது ஜப்பான் நாட்டிலும் , 7ம் நூற்றாண்டை சேர்ந்த சுவடி நேபாள நாட்டிலும் உள்ளன.

சுவடிகளின் முதல் ஓலையிலும் கடைசி ஓலையிலும் காலங்கள் குறிப்பிட பட்டாலும்ஒரு மொழியின் எழுத்து வடிவம் கொண்டே பெரும்பாலும் அதன் காலம் கணிக்கபடுகிறது.

நம் நாட்டில் இருப்பது 11 ம் நூற்றாண்டிற்கு பிறகு தான்அதுவும் தமிழ் நாட்டில் சரஸ்வதி மகாலில் இருப்பது என்பது பெருமையே.

அவை சங்க இலக்கியங்கள் என்பது ஒரு கூடுதல் தகவல்.


அனுப்பிய மற்றொரு ஓலை சுவடியின் புகை படம் 

ஓலை சுவடி என்பது 4 முக்கிய காரணங்களான ஈரப்பதம்,தூசி,அதிக வெளிச்சம் மற்றும் வெப்பம் ஆகியவற்றால் அழிந்து போகிறது.

மழைக் காலங்களில் ஈரப் பதத்தை உறிஞ்சி வெயில் காலத்தில் அதனை வெளியிடுவதால் சுருங்கி விரிந்து சுவடிகள் வீணாகின்றன.

ஈரமான அந்த சுவடிகளை பல பூச்சிகள்  சாப்பிட வரும். அப்போது முட்டை இட்டு வெளி வரும் புழுக்களே சுவடிகளின் அழிவிற்கு காரணம்.

இதை தவிர்க்க நம் முன்னோர்கள் அக்காலத்தில் அடுப்படிகளில் பரண் வைத்து அதன் மீது சுவடிகளை வைத்தனர்புகை படிவதினால் பாதிப்பு குறையும் என்பதனால்.

அந்த சுவடிகளை வருடம்  இரு முறை எடுத்து தூசு தட்டி சுத்தம் செய்து மீண்டும் பரண் மீதே முன்னோர்கள் வைத்து வந்தனர்,  மழை காலம் முன்னரும் (சரஸ்வதி  பூஜை) பின்னரும்  (ஆடி மாதம்).

மழை காலத்திற்கு பின்னர் சிதிலம் அடைந்த சுவடிகளை முன்னோர்கள் நெருப்பில் (பிரதி எடுத்த பின்) இடும் பழக்கமே போகி பண்டிகை என்றானது என அவர் சொன்ன போது தான் போகிப் பண்டிகையின் காரணம் அறிந்து கொண்டேன்.

ஒரு சிலர் போகியை மூடத்தனம் என்றெண்ணி பிரதி எடுக்காமலே நிறைய சுவடிகளை நெருப்பில் இட்டதன் காரணத்தால் நாம் பல தகவல்களை இழந்துவிட்டோம் என்று சொன்ன அவர் குரலில் வருத்தமே மேலோங்கி இருந்தது என்றால் அது மிகை இல்லை.

நம் முன்னோர்கள் மர பெட்டிகளில் சுவடிகளை சிவப்பு துணி கொண்டு சுற்றி வைத்து பாதுகாத்தனர். சிவப்பு நிற துணி உமிழும் கதிர் பூச்சிகளுக்கு எரிச்சலை கொடுக்கும் என்பதனால் பூசிகள் அண்டாது என்பதே காரணம்.

வசம்பு மற்றும் நிழலில் காய வைத்த வேப்பிலை கொண்டும் இவற்றை பாதுகாக்கலாம்.

சுமார் 15 – 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை ஒளிப் பட நகல்களாய் பிரதிகள் எடுக்கப் பட்ட இந்த சுவடிகள் தற்போது இணையதளத்தில் மின்னணுவியல் வடிவத்தில் ஏற்றப்பட்டு தகவல்கள் பாதுகாக்கப் படுகின்றன என்பது நமக்கு மிகவும் மகிழ்ச்சியான செய்தியே.

புதன், 7 மார்ச், 2018

உயர்ந்த மனிதர்


வலைப் பூவின் இந்த பகுதிக்கு செல்லுமுன் ஒரு நன்றி கூற விழைகிறேன்.

2017 ஜூன் மாத இறுதியில் ஒரு சனிக் கிழமை மாலையில் சுமார் அரை மணி நேரம் நான், சிறு குழந்தைகளுக்கும் மிகுந்த மரியாதை தந்து பழகும் இனிய நண்பர் திரு. கரந்தை ஜெயகுமார் அவர்களுடன் வலைப் பூவில் எழுதுவதை பற்றி பேசிக் கொண்டிருந்த போது எனக்கு கிடைத்த ஊக்கமே ஏதேனும் ஒன்றை வலை பூவில் என்னை எழுத வைத்தது. 

அப்படி எழுத துவங்கி முதலில் என பாட்டனாருக்கு அஞ்சலியும் தற்போது என் சித்தப்பாவிற்கு ஒரு நன்றியையும் செலுத்த வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்த என் வலைபூ ஆசான் திரு. ஜெயகுமார் அவர்களுக்கு நான் என்றும் நன்றி உடையவன்.



வாருங்கள் நண்பர்களே, எனக்கு எல்லாமுமாய் இருந்து உதவிவரும், ஒரு மாபெரும் மனிதரைத் தங்களுக்கு அறிமுகம் செய்து வைக்க விரும்புகின்றேன்.

 “எந்நன்றி  கொன்றார்க்கும்  உய்வுண்டாம்  உய்வில்லை
செய்ந்நன்றி  கொன்ற  மகற்கு”    

மேற் கூறிய இந்த குறளிற்கு பொறுத்தமாய் என் வாழ் நாளில் நான் ஒருவரை நினைத்துக் கொண்டே இருக்க வேண்டுமானால் அவர், திரு. அருண் தியாகராஜன் அவர்கள்.

இந்த பெயரை கேட்டாலே எனக்கு மகிழ்ச்சி , பரவசம் ஏற்படும் கூடவே என்றும் மாறா நன்றி உணர்ச்சியும்.

இவர் எனது தந்தையின் ஒன்று விட்ட சகோதரர்.

எனது பெரிய பாட்டனார் திரு. தியாகராஜன் பெரும் அறிவாளி என தஞ்சை கரந்தையில் பெயர் பெற்றவர்.

1920 – களில் இங்கிலாந்து நாட்டில் உள்ள மான்செஸ்டர் நகரில் சென்று படித்தார். திரும்பி பாரதம் வந்து , FLAKT எனும் நிறுவனத்தில் பெரிய பதவியில் சேர்ந்தார்.

இவர் தனது மகனை 1960களில் சுவீடன் நாட்டிற்கு அனுப்பி படிக்க வைத்தார், பொறியியல் இளங்கலையும், முதுகலையும்.

அந்நாட்டு மொழியே தெரியாமல் , சென்ற சில மாதங்களிலேயே அந்த மொழி கற்று படிப்பில் சிறந்து விளங்க தொடங்கினார் எனது சித்தப்பா திரு அருண் அவர்கள்.

பின்னர் அமெரிக்காவில் உள்ள ஹார்வர்ட் பல்கலைகழகத்திலும் சென்று சிறிது காலம் படித்தார் மேலாண்மையை.

படித்து முடித்து பாரதம் வந்து, அதே FLAKT நிறுவனத்தில் பொது மேலாளராய் 1968 – இல் பணியில் சேர்ந்த அவர் சுமார் 9 வருடங்களுக்குள்ளேயே நிர்வாக இயக்குனராக பதவி உயர்வு பெற்றார், கல்கத்தாவில்.

80 களின் துவக்கத்தில் பெங்களூருக்கு பணி மாற்றம் பெற்று அங்கேயே தற்போது வாழ்ந்து வரும் அந்த பெருமகனார் தாம் நிர்வாக இயக்குனராக பதவி வகித்த ABB என்ற நிறுவனத்திலிருந்து பதவி விலகி, HP (Hewlett Packard) நிறுவனத்தில் இணைந்தார் இந்திய பகுதியின் அதிபராக. 

இடையே WIPRO-விலும் அவர் சுமார் 2 ஆண்டு காலம் பணி புரிந்தார்.
இதன் காரணமாய் WIPRO வின் திரு. பிரேம்ஜி அவர்களுக்கு நெருங்கிய நண்பராகவும் ஆனார்.

மனித வடிவில் இந்த தெய்வம் எங்கள் குடும்பதினருக்கு குறிப்பாக எனக்கு செய்த / செய்து வரும் உதவிகள் கணக்கில் அடங்காது.


                              சித்தப்பா திரு. அருண் தியாகராஜன் 

கலியுகத்தில் கர்ணனாய் மறைந்த எனது பாட்டனாருக்கு அடுத்த படியாக என கண் முன்னே நான் இவரை தான் கண்டு வருகிறேன்.

நான் 10ஆம் வகுப்பு படித்துகொண்டு இருக்கும் போதே, தஞ்சையில் இருந்த தமது இல்லத்தை எனக்கு அன்பளிப்பாய் கொடுத்தவர்.

நான் கல்லூரி படிப்பை முடித்த சுமார் 1.5 ஆண்டு காலத்திற்கு பின் ABB நிறுவனத்தில் எனக்கு முதன் முதலில் பணி கிடைக்க பெரும் உதவி செய்தவர் அவர்.  

அதன் பிறகு நான் அமெரிக்கா சென்று திரும்பி வந்து வேலை தேடிக்கொண்டிருந்த போது HP நிறுவனத்திலும் நேர்முக தேர்வினை ஏற்பாடு செய்து பணி வாங்கிக் கொடுத்தார் மீண்டும்.

இவரின் அறிவு மிகக் கூர்மையானது என, இவரது நட்பு வட்டராம் கூற கண்டிருக்கிறேன் , பல சமயங்கள்  நேரிலும்.

அமிதாப் பச்சன் நடத்தி வந்த “கோடீஸ்வரன்” நிகழ்ச்சிக்கு இவர் வந்தால் எந்த உதவியும் இல்லாமலே மிக எளிதாய் பரிசு 10 கோடியாக இருந்தாலும் பெற்று வரக் கூடிய ஆழ்ந்த உலக ஞானம் இவருக்கு உண்டு.

தமிழ், ஹிந்தி , ஸ்வீடிஷ் , பெங்காலி மற்றும் ஆங்கிலம் ஆகிய 5 மொழிகளிலும் வல்லமை பெற்றவர்.

இவர் கூறி தான் நான் உறுதி படுத்திக் கொண்டேன் – தமிழ் மொழி சமஸ்கிருதத்தை விட பழமையானது என்பதை.

வாழ்வில் உயர்ந்த நிலைக்குச் சென்றபோதும், தலை கணம் சிறிதும் இல்லாதவர்.

உங்களைப் பற்றி வலைப் பூவில் எழுத ஆசை என்ற போது , வேறு ஏதாவது உருப்படியாய் எழுது என்று அன்பாய் மறுத்தவரை வற்புறுத்தி சம்மதம் வாங்கினேன் என்றால் அது மிகை இல்லை.

லண்டன் பிசினஸ் ஸ்கூல் – ஆலும், இந்தியாவின் பெரும் கல்வி நிறுவனங்களினாலும் பகுதி நேர பேச்சாளராக அழைக்கப்பட்ட பெருமை கொண்டவர் என்று சொல்வதை விட , இவரை அழைத்து பெருமை தேடிக் கொண்டன என்பதே என் கருத்து.

                   
சித்தப்பா அமெரிக்க முன்னாள் அதிபர் திரு. ஜார்ஜ் புஷ்ஷுடன்

நான் பெங்களூரில் பணி புரிந்து கொண்டிருந்த காலத்தில் , என் குடும்பத்தினருடன் அவர் இல்லம் சென்று, அவரை சந்தித்து வருவதுண்டு.

அவரது வீட்டில் இருந்து புறப்படும் பொழுது, போர்டிகோ வரை வந்து எங்களை வழி அனுப்பும் உயர் குணம் உடையவர்.

இந்த மனிதருடன் தொலை பேசியில் பேசும் போது எல்லாம் அவரிடம் நான் கொண்ட மரியாதை நிமித்தமாக நின்று கொண்டே தான் பேசி வந்தேன் நீண்ட வருடங்களாய்.

இந்த பழக்கத்தை சில வருடங்களுக்கு முன்பு தான் மாற்றிக் கொண்டேன்.

எனது தங்கையின் திருமணம் பற்றிய தகவலை அவருடன் பகிர்ந்து கொண்ட  போது, முதலில் திருமண தேதியை சொல், அழைப்பிதழ் தேவையில்லை என சம்பிரதாயங்களை உடைத்தெறிந்தவர்.

இன்று ஓய்வு பெற்ற பின் , பல நிறுவனங்களில் இயக்குனர் குழுவில் இணைந்து பகுதி நேர பணி ஆற்றி வருகிறார்.

இந்த ஆண்டு ஜனவரியில் தன்னுடன் சுவீடன் நாட்டில் தன்னுடன் ஒன்றாய் படித்த நண்பர்களை அழைத்து கர்நாடகா மாநிலத்தை வலம் வந்தார்.

இன்று சமூக வலை தளங்களின் உதவி கொண்டு மாணவர்கள் ஒன்றாய் இணைவது ஓர் ஆச்சர்யமான செய்தி இல்லை எனினும், தொலை தொடர்பு வசதிகள் மிகவும் குறைந்த 60களின்  மத்தியிலிருந்து இந்த நண்பர் கூட்டம் இணைந்திருப்பது அற்புதம் தான்.

சுமார் 90 வருடங்கள் பழமையான எங்கள் இல்லத்தை நான் இடித்து விட்டு கட்ட வேண்டும் என அவருடன் நான் பேசிக் கொண்டிருந்த போது, தானாய் மனமுவந்து அள்ளிக் கொடுத்தார் நாங்கள் வீடு கட்ட.

இவரை பற்றி வலைப்பூவில் சிறிதேனும் எழுதும் வாய்ப்பு கிடைத்தை எனது பெரும் பேறாகவே நான் கருதுகிறேன்.

இன்று வள்ளுவர் உயிரோடு இருந்தால் மிகவும் மகிழ்ந்திருப்பார்

வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனையது உயர்வு 


என்று தாம் எழுதிய குறளிற்கு சிறந்த உதாரணமாய் இந்த மனிதரை கண்ட மாத்திரத்தில்.